என் மலர்
செய்திகள்

புவனகிரி அருகே தந்தை-மகள்களுக்கு அரிவாள் வெட்டு, வீட்டுக்கு தீ வைப்பு: மர்ம கும்பல் அட்டூழியம்
புவனகிரி அருகே தந்தை மற்றும் இரண்டு மகள்களை அரிவாளால் வெட்டி விட்டு, வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது 45). கொத்தனார். இவரது மனைவி மங்கையர்கரசி கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டார். செந்திலுக்கு சுவேதா(18), நிவேதா(16) ஆகிய 2 மகள்களும், அசோக்(28) என்ற மகனும் உள்ளனர் அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை.
அசோக் நேற்று இரவு வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டார். செந்தில் அவரது மகள்கள் சுவேதா, நிவேதா ஆகியோர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார்கள். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். செந்தில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செந்தில், நிவேதா, சுவேதா ஆகிய 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர் மர்மகும்பல் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். வீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் வீடு தீப்பற்றி எரிந்தது. உடனே செந்தில் ரத்தகாயங்களுடன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன்னையும் தன் மகள்களையும் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு வீட்டுக்கு தீ வைத்ததாக கூறினார்.
பொதுமக்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். படுகாயம் அடைந்த சுவேதா, நிவேதா, செந்தில் ஆகியோரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் நிவேதாவின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது. அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டுக்கு தீ வைத்து தந்தை, மகள்களை அரிவாளால் வெட்டிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது 45). கொத்தனார். இவரது மனைவி மங்கையர்கரசி கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டார். செந்திலுக்கு சுவேதா(18), நிவேதா(16) ஆகிய 2 மகள்களும், அசோக்(28) என்ற மகனும் உள்ளனர் அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை.
அசோக் நேற்று இரவு வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டார். செந்தில் அவரது மகள்கள் சுவேதா, நிவேதா ஆகியோர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார்கள். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். செந்தில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செந்தில், நிவேதா, சுவேதா ஆகிய 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர் மர்மகும்பல் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். வீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் வீடு தீப்பற்றி எரிந்தது. உடனே செந்தில் ரத்தகாயங்களுடன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன்னையும் தன் மகள்களையும் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு வீட்டுக்கு தீ வைத்ததாக கூறினார்.
பொதுமக்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். படுகாயம் அடைந்த சுவேதா, நிவேதா, செந்தில் ஆகியோரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் நிவேதாவின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது. அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டுக்கு தீ வைத்து தந்தை, மகள்களை அரிவாளால் வெட்டிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






