என் மலர்
செய்திகள்

தாம்பரத்தில் இருந்து கவுகாத்தி ரெயில் இன்று முதல் வெள்ளோட்டமாக இயக்கப்படுகிறது
தாம்பரம் 3-வது முனையத்தில் இருந்து இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை கவுகாத்தி ரெயில் வெள்ளோட்டமாக இயக்கப்படுகிறது.
தாம்பரம்:
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரெயில் முனையங்கள் உள்ளன. தாம்பரத்தில் 3-வது ரெயில் முனையம் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. தண்டவாளம் மற்றும் பிளாட்பாரங்களும் அமைக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் தாம்பரம் முனையத்தில் இருந்து இன்று முதல் 30-ந் தேதி வரை ரெயில் வெள்ளோட்டம் நடக்கிறது. இந்த வெள்ளோட்டத்தின் போது வழக்கமாக எழும்பூரில் இருந்து புறப்படும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
இதற்காக கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் ரெயில் முனையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 9.15 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளோட்டமாக தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. பின்னர் எழும்பூர் சென்று அங்கிருந்தும் பயணிகளை ஏற்றிக் கொண்டு கவுகாத்தி செல்லும் இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது.
வருகிற 30-ந் தேதி வரை கவுகாத்தி ரெயில் வெள்ளோட்டமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். அதன் பிறகு தாம்பரத்தில் இருந்து பல ரெயில்கள் இயக்கப்படும்.
வெள்ளோட்டத்தின் போது 7-ந்தேதி (இன்று), 14-ந் தேதி, 21-ந் தேதி, 28-ந் தேதிகளில் கவுகாத்தி ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இதே போல் திருநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து 10-ந் தேதி, 17-ந் தேதி, 24-ந் தேதி, 31-ந் தேதிகளில் புறப்பட்டு செல்லும்.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரெயில் முனையங்கள் உள்ளன. தாம்பரத்தில் 3-வது ரெயில் முனையம் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. தண்டவாளம் மற்றும் பிளாட்பாரங்களும் அமைக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் தாம்பரம் முனையத்தில் இருந்து இன்று முதல் 30-ந் தேதி வரை ரெயில் வெள்ளோட்டம் நடக்கிறது. இந்த வெள்ளோட்டத்தின் போது வழக்கமாக எழும்பூரில் இருந்து புறப்படும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
இதற்காக கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் ரெயில் முனையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 9.15 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளோட்டமாக தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. பின்னர் எழும்பூர் சென்று அங்கிருந்தும் பயணிகளை ஏற்றிக் கொண்டு கவுகாத்தி செல்லும் இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது.
வருகிற 30-ந் தேதி வரை கவுகாத்தி ரெயில் வெள்ளோட்டமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். அதன் பிறகு தாம்பரத்தில் இருந்து பல ரெயில்கள் இயக்கப்படும்.
வெள்ளோட்டத்தின் போது 7-ந்தேதி (இன்று), 14-ந் தேதி, 21-ந் தேதி, 28-ந் தேதிகளில் கவுகாத்தி ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இதே போல் திருநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து 10-ந் தேதி, 17-ந் தேதி, 24-ந் தேதி, 31-ந் தேதிகளில் புறப்பட்டு செல்லும்.
Next Story






