என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரத்தில் வேன் மீது லாரி மோதல்: சுற்றுலா பயணிகள் 13 பேர் படுகாயம்
Byமாலை மலர்4 Aug 2017 7:02 AM GMT (Updated: 4 Aug 2017 7:02 AM GMT)
காஞ்சீபுரத்தில் சுற்றுலா வேன் மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சீபுரம்:
மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 13 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்து உள்ளனர். நேற்று இரவு அவர்கள் மேல்மருவத்தூரில் இருந்து காஞ்சீபுரத்துக்கு வேனில் புறப்பட்டனர்.
அதிகாலை 2 மணியளவில் காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து ஆரணிக்கு நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி திடீரென வேன் மீது மோதியது.
இதில் வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் மகேஷ் சூரி, சமீர், தினேஷ் சல்லி உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் மகேஷ் சூரி, சமீர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 13 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்து உள்ளனர். நேற்று இரவு அவர்கள் மேல்மருவத்தூரில் இருந்து காஞ்சீபுரத்துக்கு வேனில் புறப்பட்டனர்.
அதிகாலை 2 மணியளவில் காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து ஆரணிக்கு நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி திடீரென வேன் மீது மோதியது.
இதில் வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் மகேஷ் சூரி, சமீர், தினேஷ் சல்லி உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் மகேஷ் சூரி, சமீர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X