என் மலர்
செய்திகள்

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என டெல்லியில் இருந்து திரும்பிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறுவதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்.
3 நாட்களாக அங்கு தங்கியிருந்த அவர் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் நட்டா, ராஜ்நாத்சிங், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரை சந்தித்து மீண்டும் அழுத்தம் கொடுத்தார். அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அவருடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்று நிரந்தர விலக்கு தரவில்லை என்றாலும் இந்த ஒரு வருடமாவது தரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
உள்துறை, சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள், உயர் அதிகாரிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதிகட்ட முயற்சியில் ஈடுபட்டார்.
தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மோடி கூறினாலும் இன்னும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் தெரியாததால் மாணவர்களும், பெற்றோர்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும், கால நெருக்கத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நீட் தேர்விற்கு விலக்கு அளித்தது போல இந்த வருடமும் விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு சார்பில் அவசர தீர்மானம் இயற்றி அதை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி உள்ளோம்.
பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் சட்ட சிக்கல் இருப்பதாகவும், அதனை எப்படி தீர்க்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல நீதிமன்ற தீர்ப்புகளை கோடிட்டு காட்டி இருக்கிறோம். தமிழக அரசு சார்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

தமிழக அரசு, மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் தரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
எந்த முயற்சியும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. இந்த சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவில்லை. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் தராத அளவிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து இருக்கிறது. ஒரேநாளில் 3 முறை மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து இதுகுறித்து பேசி இருக்கிறோம்.
எல்லா மாநிலத்திலும் நுழைவுத்தேர்வு உண்டு. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் பிளஸ்-2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதே நடைமுறை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறுவதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்.
3 நாட்களாக அங்கு தங்கியிருந்த அவர் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் நட்டா, ராஜ்நாத்சிங், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரை சந்தித்து மீண்டும் அழுத்தம் கொடுத்தார். அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அவருடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்று நிரந்தர விலக்கு தரவில்லை என்றாலும் இந்த ஒரு வருடமாவது தரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
உள்துறை, சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள், உயர் அதிகாரிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதிகட்ட முயற்சியில் ஈடுபட்டார்.
தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மோடி கூறினாலும் இன்னும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் தெரியாததால் மாணவர்களும், பெற்றோர்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும், கால நெருக்கத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நீட் தேர்விற்கு விலக்கு அளித்தது போல இந்த வருடமும் விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு சார்பில் அவசர தீர்மானம் இயற்றி அதை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி உள்ளோம்.
பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் சட்ட சிக்கல் இருப்பதாகவும், அதனை எப்படி தீர்க்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல நீதிமன்ற தீர்ப்புகளை கோடிட்டு காட்டி இருக்கிறோம். தமிழக அரசு சார்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

தமிழக அரசு, மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் தரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
எந்த முயற்சியும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. இந்த சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவில்லை. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் தராத அளவிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து இருக்கிறது. ஒரேநாளில் 3 முறை மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து இதுகுறித்து பேசி இருக்கிறோம்.
எல்லா மாநிலத்திலும் நுழைவுத்தேர்வு உண்டு. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் பிளஸ்-2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதே நடைமுறை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






