என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டு வாடகை பணம் தகராறு: வடமாநில வாலிபர் குத்திக் கொலை - நண்பர் கைது
    X

    வீட்டு வாடகை பணம் தகராறு: வடமாநில வாலிபர் குத்திக் கொலை - நண்பர் கைது

    வீட்டு வாடகை பணம் தகராறில் வடமாநில வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் தில்வார் உசேன் (வயது 38). இவர் நண்பர்கள் சித்திக் பியா, சுமன் ஆகியோருடன் சோழிங்கநல்லூர் நேரு நகர் லட்சுமி தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    இவர்களில் தல்வார் உசேன் ஓட்டலிலும், சித்திக்பியாவும், சுமனும் வெல்டிங் கம்பெனியிலும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதையடுத்து வாடகை பணம் பிரிப்பது குறித்து நேற்று இரவு நண்பர்கள் 3 பேரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது தல்வார் உசேனுக்கும், சித்திக்பியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சித்திக்பியா அருகில் கிடந்த கத்தியால் தல்வார் உசேனை குத்தினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே சித்திக் பியா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தல்வார்உசேன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த சித்திக்பியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×