என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்
    X

    மானாமதுரையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்

    மனைவிக்கு தெரியாமல் இளம் பெண்ணை 2-வது திருமணம் செய்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    சிவகங்கை:

    மானாமதுரை அருகே உள்ள கீழபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி (வயது 25). இவருக்கும், மாங்குடியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 7 வயதில் மகன் உள்ளான். பழனிச்சாமி அடிக்கடி வெளியே சென்று வருவார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்று வந்த அவர் ஆனந்திக்கு தெரியாமல் நிவேதா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தார்.

    இதை அறிந்த ஆனந்தி மதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சேது பாமா விசாரணை நடத் தினார்.

    தொடர்ந்து பழனிச்சாமி, அவரது தாய் கலாமணி, 2-வது மனைவி நிவேதா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    காளையார் கோவில் அருகே உள்ள புல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜாத்தி (34), சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனக்கும், சிவபாலன் என்பவருக்கும் 29-1-2006-ல் திருமணம் நடைபெற்றது. 10 வயதில் மகன் உள்ளான்.

    பொள்ளாச்சியில் டாஸ்மாக் கடை சூப்பர் வைசராக எனது கணவர் அந்த வேலையை விட்டு விட்டு சமீபத்தில் ஊர் திரும்பினார். அதன் பிறகு தொழில் தொடங்க வேண்டும். அதற்கு பணம் வாங்கி வா என கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி விசாரணை நடத்தி சிவபாலன், அவரது தாய் சவுந்தரவள்ளி, உறவினர் சுரேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

    Next Story
    ×