என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆசிரியர் ஓட்டம்
பண்ருட்டி அருகே மாணவியை கடத்தி ஆசிரியர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு வன்னியர்புரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 33). இவர் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா. இவரும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார்.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மருங்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் கீழக்கொல்லையை சேர்ந்த சசிகலா (16). பிளஸ்-2 படித்து வருகிறார்.
ஆசிரியர் பன்னீர்செல்வத்துக்கும், மாணவி சசிகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4.6.17 அன்று பன்னீர்செல்வம் ஆசைவார்த்தை கூறி மாணவி சசிகலாவை திருப்பதிக்கு கடத்திசென்று திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர் மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திவந்தார்.
இந்த தகவல் அவரது மனைவி கார்த்திகாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் மாணவி சசிகலாவுக்கு 16 வயது தான் ஆகிறது. ஆனால் அவரை எனது கணவர் பன்னீர்செல்வம் திருமணம் செய்துள்ளார். இது சட்டப்படி குற்றம். எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவி சசிகலாவை மீட்டு கடலூர் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர்.
இந்தநிலையில் பண்ருட்டி மகளிர் போலீசார் மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசிரியர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
மாணவியை கடத்தி ஆசிரியர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு வன்னியர்புரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 33). இவர் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா. இவரும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார்.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மருங்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் கீழக்கொல்லையை சேர்ந்த சசிகலா (16). பிளஸ்-2 படித்து வருகிறார்.
ஆசிரியர் பன்னீர்செல்வத்துக்கும், மாணவி சசிகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4.6.17 அன்று பன்னீர்செல்வம் ஆசைவார்த்தை கூறி மாணவி சசிகலாவை திருப்பதிக்கு கடத்திசென்று திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர் மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திவந்தார்.
இந்த தகவல் அவரது மனைவி கார்த்திகாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் மாணவி சசிகலாவுக்கு 16 வயது தான் ஆகிறது. ஆனால் அவரை எனது கணவர் பன்னீர்செல்வம் திருமணம் செய்துள்ளார். இது சட்டப்படி குற்றம். எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவி சசிகலாவை மீட்டு கடலூர் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர்.
இந்தநிலையில் பண்ருட்டி மகளிர் போலீசார் மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசிரியர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
மாணவியை கடத்தி ஆசிரியர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






