என் மலர்
செய்திகள்

சாராயம் விற்ற பெண்ணை கைது செய்யாத ஏட்டுகள் 2 பேர் சஸ்பெண்டு
கடலூர் முதுநகர் பகுதியில் சாராயம் விற்ற பெண்ணை கைது செய்யாத ஏட்டுகள் 2 பேரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பகுதியில் புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
கடலூர் சிப்காட் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடலூர் முதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாராயம் விற்ற ஒரு பெண்ணை, போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அந்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யவில்லை. அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்யாமல் அவரை திருப்பி அனுப்பி விட்டனர்.
இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் சாராயம் விற்றபோது பிடிபட்ட பெண்மீது வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்யாமல் விடுவித்ததற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலைய ஏட்டுகள் சரவணன், செந்தில்குமார் ஆகியோர் காரணம் என தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
கடலூர் முதுநகர் பகுதியில் புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
கடலூர் சிப்காட் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடலூர் முதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாராயம் விற்ற ஒரு பெண்ணை, போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அந்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யவில்லை. அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்யாமல் அவரை திருப்பி அனுப்பி விட்டனர்.
இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் சாராயம் விற்றபோது பிடிபட்ட பெண்மீது வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்யாமல் விடுவித்ததற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலைய ஏட்டுகள் சரவணன், செந்தில்குமார் ஆகியோர் காரணம் என தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
Next Story






