என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கம்புணரி அருகே வளர்ப்பு மகள் இறந்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    சிங்கம்புணரி அருகே வளர்ப்பு மகள் இறந்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    சிங்கம்புணரி அருகே வளர்ப்பு மகள் இறந்ததால் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட் டம் சிங்கம்புணரி தாலுகா மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடா ஜலபதி, நகை கடை ஊழியர். இவரது மனைவி அமுதா (வயது 44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனாலும் அமுதா தனது உறவுக்கார பெண்ணை மகளாக வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் வளர்ப்பு மகள் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் அமுதா சோகத் தில் விரக்தியுடன் காணப் பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து அவரது தந்தை முத்துச்சாமி சிங்கம் புணரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொன்ரகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×