search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எட்டயபுரத்தில் துப்புரவு தொழிலாளி தற்கொலை
    X

    எட்டயபுரத்தில் துப்புரவு தொழிலாளி தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எட்டயபுரத்தில் துப்புரவு தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரத்தை அடுத்த ரண சூரநாயக்கன்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் பைட்டன்(வயது 45). இவர் எட்டயபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று ரணசூர்நாயக்கன்பட்டி அருகே உள்ள பிதப்புரம் கண்மாயில் மயங்கிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து இவரது மனைவி மற்றும் உறவினர்கள் கண்மாயில் சென்று பார்த்தனர். பின்னர் உடனடியாக ஆம்புலன்சு மூலம் பைட்டனை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆஸ்பத்திரியில் பரிசோதித்த போது பைட்டன் வரும் வழியிலேயே இறந்து போனது தெரிய வந்தது.இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பைட்டன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பைட்டனுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
    Next Story
    ×