search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டியில் குடிநீர் பிடிப்பதில் தகராறு: கணவன்-மனைவி மீது தாக்குதல்
    X

    ஆண்டிப்பட்டியில் குடிநீர் பிடிப்பதில் தகராறு: கணவன்-மனைவி மீது தாக்குதல்

    ஆண்டிப்பட்டியில் குடிநீர் பிடிக்கும் தகராறில் கணவன்-மனைவி தாக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஆலந்தளிர் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி. இவரது மனைவி பஞ்சம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் மனைவி மஞ்சம்மாள் அங்கு வந்தார்.

    அப்போது 2 பேருக்கும இடையே தண்ணீர் பிடிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது இருவரும் குழாயடி பகுதியில் கடுமையாக மோதிக் கொண்டனர். தகவல் அறிந்த பரமசிவத்தின் உறவினர்கள் 2 பேர் அங்கு வந்தனர்.

    அவர்கள் திடீரென கோட்டைச்சாமி, அவரது மனைவி பஞ்சம்மாள் மீது சரமாரியாக தாக்கினர். இது குறித்து கோட்டைச்சாமி கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சம்மாளை கைது செய்தனர். பரமசிவம் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×