என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு கிராமத்தில் வசிப்பவர் லெட்சுமணன். இவரது மனைவி ரெத்தினம் (வயது80). இவர் சம்பவத்தன்று வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது நாகை -வேதாரண்யம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கந்தசாமி மகன் குருநாதன் (32) என்பவர் ரெத்தினம் மீது மோதினார்.
இதில் ரெத்தினம் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரெத்தினத்தின் மகன் சம்பத்குமார் கொடுத்த புகாரின்பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






