என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே லாரி மோதி மூதாட்டி பலி
சீர்காழி:
சீர்காழி அடுத்த பழைய பாளையம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஞானசுந்தரி (வயது 57). மீன், கருவாடு விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு பழையாறு பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக ஞானசுந்தரி மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கொள்ளிடம் அலக்குடி கிராமம் நானல் படுகையை சேர்ந்த தமிழ்வானன் (22). என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






