என் மலர்
செய்திகள்

பெண்கள் போராட்டத்தால் மதுக்கடையை பூட்டிய அதிகாரிகள்
பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று பெண்கள் உறுதியாக கூறியதால் வேறு வழியின்றி அதிகாரிகள் மதுக்கடையை பூட்டினர். இச்சம்வத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த நேரு நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியை அடுத்துள்ள நேரு நகர் பஸ் நிறுத்தம் அருகே புதியதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.
புதியதாக திறக்கப்பட்ட கடையுடன் மேலும் 2 மது பானக்கடைகள் திறக்கப்பட உள்ளன. தற்போது மாலை நேரத்தில் மதுக்கடையில் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் மேலும் இரு கடைகள் திறக்கப்பட்டால் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேருநகர் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சத்தியமங்கலம்-கோபி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சத்தி-கோபி இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என பெண்கள் உறுதியாக கூறியதால் வேறு வழியின்றி அதிகாரிகள் மதுக்கடையை பூட்டினர்.
சத்தியமங்கலம்-கோபி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்திய போலீசார்.
சத்தியமங்கலம் அடுத்த நேரு நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியை அடுத்துள்ள நேரு நகர் பஸ் நிறுத்தம் அருகே புதியதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.
புதியதாக திறக்கப்பட்ட கடையுடன் மேலும் 2 மது பானக்கடைகள் திறக்கப்பட உள்ளன. தற்போது மாலை நேரத்தில் மதுக்கடையில் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் மேலும் இரு கடைகள் திறக்கப்பட்டால் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேருநகர் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சத்தியமங்கலம்-கோபி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சத்தி-கோபி இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என பெண்கள் உறுதியாக கூறியதால் வேறு வழியின்றி அதிகாரிகள் மதுக்கடையை பூட்டினர்.
சத்தியமங்கலம்-கோபி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்திய போலீசார்.
Next Story






