என் மலர்
செய்திகள்

பிரசவத்தில் குழந்தை இறந்ததால் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை
காரைக்குடி அருகே பிரசவத்தில் குழந்தை இறந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி:
காரைக்குடி புதுவயல் அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் புண்ணிய குமார் (வயது 28). ஊர்க்காவல் படை வீரர். இவரது மனைவி தேவிகா (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவிகாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. அவரை புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனு மதித்தனர். அங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சிறிது நேரத்தில் அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.
இந்த தகவல் புண்ணிய குமாரின் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரசவத்தின்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை என்றும், செவிலியரே பிரசவம் பார்த்தார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
காரைக்குடி புதுவயல் அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் புண்ணிய குமார் (வயது 28). ஊர்க்காவல் படை வீரர். இவரது மனைவி தேவிகா (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவிகாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. அவரை புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனு மதித்தனர். அங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சிறிது நேரத்தில் அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.
இந்த தகவல் புண்ணிய குமாரின் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரசவத்தின்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை என்றும், செவிலியரே பிரசவம் பார்த்தார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
Next Story






