என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: லாரி மீது ஏறி பெண் போராட்டம்
    X

    ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: லாரி மீது ஏறி பெண் போராட்டம்

    ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் லாரி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு ஆக்கிரமிப்பு செய்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    இதனால் பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் பஸ்களுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் பயணிகளும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற லாரியுடன் பஸ்நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்களை கண்டதும் சிறிய கடைகளை வைத்திருந்தவர்கள் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மற்ற கடைகளை ஊழியர்கள் அகற்றி பொருட்களை லாரியில் ஏற்றினர்.



    அப்போது ஜூஸ் கடை வைத்திருந்த ராணி என்பவரது கடையையும் அகற்றினர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சில வியாபாரிகளும் வந்தனர். ஆனாலும் கடையில் இருந்த பொருட்களை பேரூராட்சி ஊழியர்கள் எடுத்து லாரியில் போட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராணி அதே லாரியில் ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கடையை அகற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    அவரை பேரூராட்சி ஊழியர்கள் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டனர். அப்போது ராணியின் மகன் பிரசாந்தும் ரகளையில் ஈடுபட்டார். அவர்களை போலீசார் அழைத்து சென்று எச்சரித்து விட்டனர்.



    இதைத் தொடர்ந்து ராணி மீண்டும் லாரியில் ஏறிக் கொண்டார். பேரூராட்சி அலுவலகம் அவரை அவர் லாரியிலேயே சென்றார். அங்கு ராணியை அதிகாரிகள் அறிவுரை கூறி அனுப்பினர். மீண்டும் பஸ் நிலையத்தில் கடை அமைக்கக்கூடாது என்று எச்சரித்து உள்ளனர்.
    Next Story
    ×