என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே லாரியின் கீழ் தூங்கிய டிரைவர் நசுங்கி பலி
    X

    காஞ்சீபுரம் அருகே லாரியின் கீழ் தூங்கிய டிரைவர் நசுங்கி பலி

    காஞ்சீபுரம் அருகே லாரியின் கீழ் தூங்கிய டிரைவர் நசுங்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    அரக்கோணம் அருகே உள்ள கிருஷ்ணாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் இனாயத்துல்லா (33). லாரி டிரைவர். இவர் லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு காஞ்சீபுரத்தை அடுத்த வேளியூர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்தார். வாகனம் நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு அதன் கீழே படுத்து தூங்கினார்.

    அப்போது மற்றொரு லாரியில் வந்த டிரைவர் இம்தியாஸ் தனது லாரியை நிறுத்த இடம் இல்லாததால் இனாயத்துல்லாவின் லாரியில் ஏறி அதனை சற்று நகர்த்தினார்.

    இதில் லாரியின் கீழ் படுத்திருந்த இனாயத்துல்லா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய இம்தியாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×