என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தல் - 2 பேர் கைது
    X

    சென்னையில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தல் - 2 பேர் கைது

    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை லண்டன் புறப்பட இருந்த விமானத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து லண்டனுக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னையை சேர்ந்த மகின் அபுபக்கர், தேவக்கோட்டையை சேர்ந்த ரஜூல்தீன் ஆகியோரின் சூட்கேசை சோதனை செய்த போது தலா ஒரு கிலோ போதைப்பொருள் (பிரவுன்சுகர்) மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 4 கோடி ஆகும்.

    இதைத்தொடர்ந்து போதைப்பொருளுடன் மகின் அபுபக்கர், ரஜூல்தீன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×