என் மலர்
செய்திகள்

விபத்து
சுரண்டையில் விபத்தில் தொழிலாளி பலி
சுரண்டையில் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:
சுரண்டை கோட்டை தெருவை சேர்ந்தவர் பூதத்தான். இவரது மகன் கணேசன் (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று இரவு 11 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சுரண்டையிலிருந்து வீரகேரளம்புதூர் சென்று கொண்டு இருந்தார்.
பைக் பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரிலிருந்த ஆலமரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவலறிந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story