என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் அருகே    இரு வேறு சாலை விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி
    X

    வேப்பூர் அருகே இரு வேறு சாலை விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி

    • வேப்பூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்து கும்பகோணம் நோக்கி நடைபயணமாக சென்றனர்
    • அப்போது எ.சிற்றுர் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பாபு பலியானார்.

    கடலூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவள்ளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாபு (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவரும், அதே ஊரைச் சேர்ந்த மனோகரன் (42) என்பவரும் கும்பகோணம் சூரிய பகவான் கோவிலுக்கு காரில் வந்தனர். வேப்பூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்து கும்பகோணம் நோக்கி நடைபயணமாக சென்றனர். அப்போது எ.சிற்றுர் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பாபு பலியானார். இவருடன் சென்ற மனோகரன் லேசான காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம் - விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். வேப்பூர் அருகே விளம்பாவூர் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார் இந்த 2 விபத்துகள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×