என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்   3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது
    X

    பண்ருட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 85).
    • இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 85). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த இவரை கொலை செய்து. இவர் அணிந்திருந்த 3 பவுன் தோடு, செயின் ஆகியவைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளை யடித்து சென்றனர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 3 ஆண்டு காலமாக துப்பு ஏதும் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ராஜாராம் பொறுப்பேற்ற பிறகு, நிலுவையில் உள்ள வழக்குகளை துப்பு துலக்கிவதில் தீவிரம் காட்டினார். அதன்படி இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா நியமிக்கப்பட்டார். பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்ற வாளிகளாக மனப்பாக் கத்தை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 32), மேல் அருங்கு ணத்தை சேர்ந்த வேலாயுதம் ஆகிய 2 பேரையும் அடை யாளம் கண்டனர். இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் போலீ சார் அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். விசார ணையில், மூதாட்டி யை கொலை செய்து கொள்ளையடித்ததை 2 வாலிபர்களும் ஒத்துக் கொண்டனர்.

    மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளை யடித்த 2 நபர்களையும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மூன்று ஆண்டு களுக்கு முன்பு நடந்த கொலை, கொள்ளை வழக்கில் துப்பு துலக்கிய பண்ருட்டி போலீசாரை கடலூர் சூப்பிரண்டு ராஜா ராம் வெகுவாக பாராட்டி னார்.

    Next Story
    ×