என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் விபத்துகளில் 2 பேர் பலி
- மோட்டார் சைக்கிள் மோதியதில் மில்டன் பலத்த காயமடைந்தார்.
- சண்முகவேல் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது லாரி மோதியது.
நெல்லை:
பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் மில்டன் (வயது65). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத் தன்று அப்பகுதியில் உள்ள சங்கர் காலனியில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்பை அருகே உள்ள சாட்டு பத்தை சேர்ந்தவர் சண்முக வேல்(55). காவ லாளி. இவர் வண்ணார் பேட்டையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது லாரி மோதியது. இதில் காயமடைந்த அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






