என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
- சப் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
- 68 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோவையில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வலி நிவாரணி மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி அதனை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து சிறையில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியகடை வீதி போலீசாருக்கு புல்லுக்காட்டில் போதை மாத்திரைகளை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.
இதனை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த திருமால் வீதியை சேர்ந்த சேக் முகையதீன்(33), ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது நவாஸ்(23) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அப்போது முகமது நவாஸ் போலீசாரிடமிருந்து தப்புவதற்காக தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை போலீசார் மீட்டு கோவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட சேக் மொய்தீன், முகமது நவாஸ் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.அவர்களிடம் இருந்து 68 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.