என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது
- தெற்கு பாலபாக்யா நகரில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 10-ந் தேதி மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
- தமிழ்வாணன், மணிகண்டன் என்ற ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகரில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 10-ந் தேதி மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து லட்சுமணன் (வயது 69) என்பவர் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வாதிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியது மூன்றடைப்பை சேர்ந்த தமிழ்வாணன் (29) மற்றும் வல்லநாட்டை சேர்ந்த மணிகண்டன் என்ற ராஜேஷ் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






