search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்  கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    கோவையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

    • கைதானவர்களிடம் 3 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • கைதானவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கோவை,

    ஆனைமலை பழைய ஆத்துப்பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஆனைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கே கஞ்சா விற்ற சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ஹக்கீம் (39) என்பவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கொண்டு வந்து ஆனைமலை பகுதிகளில் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 1900 பணம், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை போல கருமத்தம்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த கோண்டுகேவத் (28) என்பவரை பெரியநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×