என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 19 பேர் பணியிட மாற்றம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 19 பேர் பணியிட மாற்றம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/04/1831316-4transfer.webp)
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 19 பேர் பணியிட மாற்றம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பாளை தாலுகா இன்ஸ்பெக்டர் மனோகரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியா குமரி மாவட்ட ங்களில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர்கள் என மொத்தம் 19 பேரை பணியிடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
காத்திருப்பு பட்டியில்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய குமார், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்ட ராக மாற்றம் செய்யப்பட்டு ள்ளார். அங்கு பணியாற்றிய மகேஷ்வரி, சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் திருவட்டாரில் பணியாற்றிய ஷேக் அப்துல் காதல் சேரன்மகாதேவிக்கும், கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சுசீந்திர த்திற்கும், அங்கு பணியாற்றிய சாயி லட்சுமி திருவட்டாருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாளை தாலுகா இன்ஸ்பெக்டர் மனோகரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
சைபர் கிரைம்
நெல்லை மாநகர உளவுப் பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று குமரி மாவட்டம் கருங்கல்லில் பதவியேற்கிறார். தென்காசியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன் பதவி உயர்வு பெற்று நெல்லை தாலுகா இன்ஸ்பெக்டராகவும், மதுரையில் பணியாற்றிய பிரேம் ஆனந்த், தூத்துக்குடி வடபாகத்திற்கும், கொல்லன்கோடு ரமா, நெலலை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய ராஜ், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு செந்தில் குமார், அங்கு பணியாற்றிய ஜெயசீலன் நாசரேத் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் குற்றப்பிரிவு வீரசோலை, விளாத்திகுளத்திற்கும், அங்கு பணியாற்றிய இளவரசு மார்த்தாண்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
காத்திருப்பு பட்டியலில் இருந்த ராஜா கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த சாந்தி கோவில் பட்டிக்கும், அங்கு பணியாற்றிய செல்லமுத்து காத்திருப்பு பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)