என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிங்காநல்லூரில் 12-ந் தேதி மாற்றுதிறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்
- தனியார் வேலைவாய்ப்பு முகாம், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ளது.
- இத்தகவலை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவையில் சிங்காநல்லூர் திருமண மண்டபத்தில் வருகிற 12-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ளது.
இதில் வேலைவாய்ப்பு மட்டுமின்றி சுயதொழில் செய்வோருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி மற்றும் தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவை தரப்பட உள்ளன.
எனவே கோவை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் கார்டு, கல்வி சான்றிதழ் மற்றும் போட்டோ ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்து உள்ளார்.
Next Story






