என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதா டெபாசிட் பெற முடியாத அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டும்- முத்தரசன் பேச்சு
Byமாலை மலர்28 March 2021 2:30 PM GMT (Updated: 28 March 2021 2:30 PM GMT)
தமிழ்நாட்டில் போட்டியிடும் 20 தொகுதிகளிலும் பா.ஜனதா டெபாசிட் பெற முடியாத அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டும் என்று முத்தரசன் பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டசபை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராமச்சந்திரனை ஆதரித்து அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
தமிழ்நாட்டில் தளி உள்பட 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிற பா.ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெற முடியாத அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டும். தமிழகத்திற்கு துரோகம் விளைவித்த அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நிறைவேற்றி தருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டசபை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராமச்சந்திரனை ஆதரித்து அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
தமிழ்நாட்டில் தளி உள்பட 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிற பா.ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெற முடியாத அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டும். தமிழகத்திற்கு துரோகம் விளைவித்த அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நிறைவேற்றி தருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X