search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    ஈரோட்டில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    ஈரோடு:

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேப்போன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள், மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று இரவு 7 மணியளவில் சித்தோட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
    Next Story
    ×