என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க.வுக்கு இனி இறங்கு முகம்தான்- விஜய பிரபாகரன்
Byமாலை மலர்9 March 2021 9:18 AM GMT (Updated: 9 March 2021 9:18 AM GMT)
எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைவார் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
பண்ருட்டி:
பண்ருட்டியில் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:-
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக இருந்தோம். ஆனால் அ.தி.மு.க.வினர் எங்களை உதாசினப்படுத்தினர். எனவே தான் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம்.
கூட்டணியில் இருந்ததால் நம் கைகள் கட்டப்பட்டிருந்தது. இப்போது சுதந்திர பறவையாக உள்ளோம். இனி அ.தி.மு.க.வுக்கு இறங்கு முகம்தான். தே.மு.தி.க. தயவால் தான் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது.
எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்று நினைக்கிறார். இதனை அ.தி.மு.க.வினர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். சாணக்கியனாக இருந்தது போதும். இனி சத்திரியனாக இருக்க வேண்டும். விஜயகாந்த், பிரேமலதாவை தனித்தனியாக பார்த்திருப்பீர்கள். இனி அவர்கள் 2 பேரையும் சேர்த்து என் உருவத்தில் பார்ப்பீர்கள்.
எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பண்ருட்டியில் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:-
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக இருந்தோம். ஆனால் அ.தி.மு.க.வினர் எங்களை உதாசினப்படுத்தினர். எனவே தான் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம்.
கூட்டணியில் இருந்ததால் நம் கைகள் கட்டப்பட்டிருந்தது. இப்போது சுதந்திர பறவையாக உள்ளோம். இனி அ.தி.மு.க.வுக்கு இறங்கு முகம்தான். தே.மு.தி.க. தயவால் தான் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது.
எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்று நினைக்கிறார். இதனை அ.தி.மு.க.வினர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். சாணக்கியனாக இருந்தது போதும். இனி சத்திரியனாக இருக்க வேண்டும். விஜயகாந்த், பிரேமலதாவை தனித்தனியாக பார்த்திருப்பீர்கள். இனி அவர்கள் 2 பேரையும் சேர்த்து என் உருவத்தில் பார்ப்பீர்கள்.
எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X