என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ரங்கசாமி
மவுனம் காக்கும் ரங்கசாமிக்கு மவுசு கூடுகிறது- பாஜக அதிர்ச்சி
கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இருந்தால்தான் தேர்தலில் முழு வெற்றியை ருசிக்க முடியும் என்பதால் ரங்கசாமியை விடாமல் பாஜக துரத்தி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ஆட்சியை பிடிக்கும் எண்ணத்துடன் பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இதனால் பெரும்பான்மை இல்லாமல் போனதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்புக்கு துணையாக இருந்தன.
இந்த கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார். இதுகுறித்து பேச பா.ஜ.க. தூதுவிட்ட போதிலும் ரங்கசாமி பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார்.
புதுச்சேரியில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முகாமிட்டு இருந்தநிலையில் ஆன்மிக பயணமாக கோவில், குளம் என ரங்கசாமி ஊர், ஊராக சென்று வருகிறார். அவரது நடவடிக்கைகள் பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இருப்பினும் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இருந்தால்தான் தேர்தலில் முழு வெற்றியை ருசிக்க முடியும் என்பதால் அவரை விடாமல் பா.ஜ.க. துரத்தி வருகிறது.
வரும் 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அதற்குள் பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி உடன்பாடு செய்து கொள்ள பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் ரங்கசாமி முடிவு எதுவும் செய்யாமல் இருந்து வருவதை பயன்படுத்தி புதுவையின் தனித்தன்மையை காக்க மதசார்பற்ற கூட்டணியில் இணையவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளரான நாஜிம் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்முகமான காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. ரங்கசாமிக்கு விடுத்துள்ள இந்த அழைப்பு பா.ஜ.க. கூட்டணி கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி தொடர்பான விவகாரத்தில் தனது தரப்பை தெளிபடுத்தாமல் மவுனம் காத்து வரும் நிலையில் ரங்கசாமிக்கு அரசியல் வட்டாரத்தில் மவுசு அதிகரித்துள்ளது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரங்கசாமி வழக்கமான தனது பணிகளில் ஈடுபட்டு வருவது புதுவை அரசியல் வட்டாரம் சூடு குறையாமல் இருந்து வருகிறது.
புதுவை சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ஆட்சியை பிடிக்கும் எண்ணத்துடன் பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இதனால் பெரும்பான்மை இல்லாமல் போனதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்புக்கு துணையாக இருந்தன.
இந்த கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார். இதுகுறித்து பேச பா.ஜ.க. தூதுவிட்ட போதிலும் ரங்கசாமி பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார்.
புதுச்சேரியில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முகாமிட்டு இருந்தநிலையில் ஆன்மிக பயணமாக கோவில், குளம் என ரங்கசாமி ஊர், ஊராக சென்று வருகிறார். அவரது நடவடிக்கைகள் பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இருப்பினும் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இருந்தால்தான் தேர்தலில் முழு வெற்றியை ருசிக்க முடியும் என்பதால் அவரை விடாமல் பா.ஜ.க. துரத்தி வருகிறது.
வரும் 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அதற்குள் பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி உடன்பாடு செய்து கொள்ள பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் ரங்கசாமி முடிவு எதுவும் செய்யாமல் இருந்து வருவதை பயன்படுத்தி புதுவையின் தனித்தன்மையை காக்க மதசார்பற்ற கூட்டணியில் இணையவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளரான நாஜிம் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்முகமான காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. ரங்கசாமிக்கு விடுத்துள்ள இந்த அழைப்பு பா.ஜ.க. கூட்டணி கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி தொடர்பான விவகாரத்தில் தனது தரப்பை தெளிபடுத்தாமல் மவுனம் காத்து வரும் நிலையில் ரங்கசாமிக்கு அரசியல் வட்டாரத்தில் மவுசு அதிகரித்துள்ளது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரங்கசாமி வழக்கமான தனது பணிகளில் ஈடுபட்டு வருவது புதுவை அரசியல் வட்டாரம் சூடு குறையாமல் இருந்து வருகிறது.
Next Story






