என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- எத்தனை தொகுதிகள் என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும்: கேஎஸ் அழகிரி
கடலூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா இந்தியாவில் தவறான ஆட்சியை நடத்துகிறது. அதையும் அதன் கூட்டணி கட்சிகளையும் எதிர்ப்பதுதான் எங்கள் நிலை.
தவறான கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். ஒத்த கருத்துள்ள கட்சிகள் இந்த கூட்டணியில் இருக்கின்றன. நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.
சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி கட்சிகள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கிறார்கள்.
சுருக்கமாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கருத்தை ஆலோசித்து வருகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி வழங்க வேண்டும் என்பதை தி.மு.க. முடிவு செய்யும். கூட்டணி கட்சிகளை நட்புடன் நாங்கள் அணுகுகிறோம்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. ராகுல்காந்தி வருகையின் போது மக்கள் அளித்த ஆதரவே இதற்கு சாட்சி.
அவரை காணவந்த பெரும் கூட்டமே காங்கிரஸ் செல்வாக்கு குறையவில்லை என்பதை காட்டுகிறது. கட்சி சார்பில் ஒரு காசுகூட செலவு செய்யாமல் இந்த கூட்டம் கூடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்