என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்
X
குளுகுளு ஆரஞ்சு ‘மூஸ்’ செய்யலாம் வாங்க...
Byமாலை மலர்28 April 2022 2:54 PM IST (Updated: 28 April 2022 2:54 PM IST)
பிரான்சு நாட்டைத் தாயகமாகக் கொண்ட ‘மூஸ்’ ரெசிபி, அதன் சுவையால் மற்ற நாடுகளுக்கும் பரவியது. ஆரஞ்சு பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘ஆரஞ்சு மூஸ்’ எவ்வாறு செய்யலாம் என்று இங்கே பார்ப்போம்.
கோடைக்காலத்தில் வெப்பத்தை சமாளிப்பதற்காக, குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்த வகையில் பழச்சாறையும், ஐஸ்கிரீமையும் கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபி தான் ‘மூஸ்’. பிரான்சு நாட்டைத் தாயகமாகக் கொண்ட ‘மூஸ்’ ரெசிபி, அதன் சுவையால் மற்ற நாடுகளுக்கும் பரவியது. ஆரஞ்சு பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘ஆரஞ்சு மூஸ்’ எவ்வாறு செய்யலாம் என்று இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
வெண்ணிலா ஐஸ் கிரீம் - 1 கப்
ஆரஞ்சுப் பழம் - 1
பால் - 250 மில்லி லிட்டர்
ஆரஞ்சு எசென்ஸ் - ½ தேக்கரண்டி
செய்முறை :
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் சுண்டக் காய்ச்சவும். கலவை கெட்டியானதும் இறக்கி குளிரச் செய்யவும்.
வெண்ணெய்யை 30 நிமிடங்கள் குளிர்விக்கவும்.
ஆரஞ்சுப் பழத்தை தோல் மற்றும் விதை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யை போட்டு முட்டை அடிப்பான் கொண்டு நன்றாகக் கிரீம் பதத்தில் அடித்துக்கொள்ளவும்.
அதில் குளிரவைத்தப் பால், வெண்ணிலா ஐஸ்கிரீம், ஆரஞ்சுப் பழத்தின் சதைப்பகுதி மற்றும் ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கி குளிர்சாதனப்பெட்டியில் 1 மணி நேரம் குளிர வைத்து ‘சில்’லென பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
வெண்ணிலா ஐஸ் கிரீம் - 1 கப்
ஆரஞ்சுப் பழம் - 1
பால் - 250 மில்லி லிட்டர்
ஆரஞ்சு எசென்ஸ் - ½ தேக்கரண்டி
செய்முறை :
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் சுண்டக் காய்ச்சவும். கலவை கெட்டியானதும் இறக்கி குளிரச் செய்யவும்.
வெண்ணெய்யை 30 நிமிடங்கள் குளிர்விக்கவும்.
ஆரஞ்சுப் பழத்தை தோல் மற்றும் விதை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யை போட்டு முட்டை அடிப்பான் கொண்டு நன்றாகக் கிரீம் பதத்தில் அடித்துக்கொள்ளவும்.
அதில் குளிரவைத்தப் பால், வெண்ணிலா ஐஸ்கிரீம், ஆரஞ்சுப் பழத்தின் சதைப்பகுதி மற்றும் ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கி குளிர்சாதனப்பெட்டியில் 1 மணி நேரம் குளிர வைத்து ‘சில்’லென பரிமாறவும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X