
தேவையான பொருட்கள் :
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
வெண்ணிலா ஐஸ் கிரீம் - 1 கப்
ஆரஞ்சுப் பழம் - 1
பால் - 250 மில்லி லிட்டர்
ஆரஞ்சு எசென்ஸ் - ½ தேக்கரண்டி
செய்முறை :
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் சுண்டக் காய்ச்சவும். கலவை கெட்டியானதும் இறக்கி குளிரச் செய்யவும்.
வெண்ணெய்யை 30 நிமிடங்கள் குளிர்விக்கவும்.
ஆரஞ்சுப் பழத்தை தோல் மற்றும் விதை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யை போட்டு முட்டை அடிப்பான் கொண்டு நன்றாகக் கிரீம் பதத்தில் அடித்துக்கொள்ளவும்.
அதில் குளிரவைத்தப் பால், வெண்ணிலா ஐஸ்கிரீம், ஆரஞ்சுப் பழத்தின் சதைப்பகுதி மற்றும் ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கி குளிர்சாதனப்பெட்டியில் 1 மணி நேரம் குளிர வைத்து ‘சில்’லென பரிமாறவும்.