என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்
X
சூப்பரான சிக்கன் 65 பிரியாணி
Byமாலை மலர்26 March 2022 9:31 AM GMT (Updated: 26 March 2022 9:35 AM GMT)
சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. இன்று சிக்கன் 65 பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 5
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய், நெய் - தேவைக்கு
சிக்கன் 65 செய்ய
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சோளம் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிக்கன் 65 செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து முக்கால் பாகம் வெந்ததும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
குக்கரில் அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய், நெய் சூடானதும் ஊற்றி பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரிந்த பின்னர் வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் கொத்தமல்லி தழை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும். மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து குக்கரை மூடவேண்டும்.
குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான சிக்கன் 65 பிரியாணி தயார்.
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 5
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய், நெய் - தேவைக்கு
சிக்கன் 65 செய்ய
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சோளம் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிக்கன் 65 செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து முக்கால் பாகம் வெந்ததும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
குக்கரில் அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய், நெய் சூடானதும் ஊற்றி பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரிந்த பின்னர் வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் கொத்தமல்லி தழை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும். மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து குக்கரை மூடவேண்டும்.
குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான சிக்கன் 65 பிரியாணி தயார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X