என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்

X
பிரெட் பிரியாணி
சுவையான பிரெட் பிரியாணி செய்யலாம் வாங்க...
By
மாலை மலர்27 Jan 2022 9:37 AM GMT (Updated: 27 Jan 2022 9:37 AM GMT)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான பிரெட் பிரியாணி ரெசிப்பியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ
பிரெட் - 10
நெய் - 150 மில்லி அளவு
வெங்காயம் - 4
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டை- 4
பிரியாணி இலை - 5
கிராம்பு- 5,
ஏலக்காய் - 5
மிளகாய்த் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1 டம்ளர்
எலுமிச்சை பழம் - 1
கொத்தமல்லி தழை- கைப்பிடியளவு
புதினா - கைப்பிடியளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பிரெட்டை துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் கொத்தமல்லி, புதினா இலை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு வதக்கவும்.
அடுத்து உப்பு, பிரெட், எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வேகவிட்டு, அரிசியைப் போட்டு அதனைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு குக்கரை மூடி 2 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் அடுப்பை வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான பிரெட் பிரியாணி ரெடி.
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ
பிரெட் - 10
நெய் - 150 மில்லி அளவு
வெங்காயம் - 4
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டை- 4
பிரியாணி இலை - 5
கிராம்பு- 5,
ஏலக்காய் - 5
மிளகாய்த் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1 டம்ளர்
எலுமிச்சை பழம் - 1
கொத்தமல்லி தழை- கைப்பிடியளவு
புதினா - கைப்பிடியளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பிரெட்டை துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் கொத்தமல்லி, புதினா இலை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு வதக்கவும்.
அடுத்து உப்பு, பிரெட், எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வேகவிட்டு, அரிசியைப் போட்டு அதனைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு குக்கரை மூடி 2 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் அடுப்பை வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான பிரெட் பிரியாணி ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
