என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
விரைவில் செய்யலாம் முட்டை பிரியாணி
Byமாலை மலர்6 April 2020 10:36 AM GMT (Updated: 6 April 2020 10:36 AM GMT)
இந்த முட்டை பிரியாணியை செய்வது மிகவும் சுலபம். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி - 1/2 கிலோ
முட்டை - 5
பட்டை பொடி - 1/4 டீஸ்பூன்
கிராம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா - 1 கப்
எலுமிச்சம்பழம் - 1
நெய் எண்ணெய் - 1 கப்
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விடவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை பொடி, கிராம்பு பொடி, சோம்பு சேர்த்த பின் பிரியாணி இலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
பின் பிரியாணி மசாலா, பச்சை மிளகாய், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பிரியாணி அரிசி - 1/2 கிலோ
முட்டை - 5
பட்டை பொடி - 1/4 டீஸ்பூன்
கிராம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா - 1 கப்
எலுமிச்சம்பழம் - 1
நெய் எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவைக்கு.
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விடவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை பொடி, கிராம்பு பொடி, சோம்பு சேர்த்த பின் பிரியாணி இலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
பின் பிரியாணி மசாலா, பச்சை மிளகாய், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் பிரியாணி அரிசியை சேர்த்து வேக வைத்த முட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கினால் சூப்பரான முட்டை பிரியாணி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X