என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மக்ரோனி குருமா செய்வது எப்படி?
Byமாலை மலர்20 March 2020 8:35 AM GMT (Updated: 20 March 2020 8:35 AM GMT)
மக்ரோனி குருமா சூடான சாதம், நாண், சப்பாத்தி, பூரியுடன் பரிமாற ஏற்றது. இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள் :
மக்ரோனி - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தனியா - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
தேங்காய் துருவல் - 1 கப்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெறும் வாணலியில் மக்ரோனியை லேசாக வறுத்து 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து வடி கட்டி கொள்ளவும்
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அத்துடன் கசகசா தனியா சேர்த்து சிவக்க விடவும்.
.தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.
அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் கறிமசாலா பொடி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் அரைத்த விழுதைப் போட்டு 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் மக்ரோனியை குருமாவில் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க விடவும்.
இறக்கி வைத்து அரை மூடி எலுமிச்சம் பழம் பிழியவும்.
மக்ரோனி - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தனியா - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
தேங்காய் துருவல் - 1 கப்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்த மல்லி புதினா - சிறிதளவு
செய்முறை :
வெறும் வாணலியில் மக்ரோனியை லேசாக வறுத்து 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து வடி கட்டி கொள்ளவும்
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அத்துடன் கசகசா தனியா சேர்த்து சிவக்க விடவும்.
.தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.
அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் கறிமசாலா பொடி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் அரைத்த விழுதைப் போட்டு 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் மக்ரோனியை குருமாவில் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க விடவும்.
இறக்கி வைத்து அரை மூடி எலுமிச்சம் பழம் பிழியவும்.
சூப்பரான மக்ரோனி குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X