என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான பாகற்காய் பக்கோடா
Byமாலை மலர்22 Feb 2020 8:32 AM GMT (Updated: 22 Feb 2020 8:32 AM GMT)
வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாகற்காயை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
பாகற்காய் - 2
அரிசி களைந்த நீர் - 1 கப்
செய்முறை:
முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி அரிசி களைந்த நீரில் போடவும்.
அரை மணி நேரத்துக்குப் பின் பாகற்காயை சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.
அடுத்து அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோம்பு, பெருங்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த பாகற்காயை பகோடாவாகப் போடவும்.
மொறு மொறு என்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.
சூப்பரான பாகற்காய் பக்கோடா ரெடி.
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
பாகற்காய் - 2
அரிசி களைந்த நீர் - 1 கப்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி அரிசி களைந்த நீரில் போடவும்.
அரை மணி நேரத்துக்குப் பின் பாகற்காயை சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.
அடுத்து அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோம்பு, பெருங்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த பாகற்காயை பகோடாவாகப் போடவும்.
மொறு மொறு என்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.
சூப்பரான பாகற்காய் பக்கோடா ரெடி.
அரிசி களைந்த நீரில் சுத்தம் செய்வதால் கசப்பு தெரியாது.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X