என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கவுனி அரிசி அல்வா
Byமாலை மலர்17 Dec 2019 8:36 AM GMT (Updated: 17 Dec 2019 8:36 AM GMT)
அரிசி வகைகளிலேயே மிகவும் சத்துள்ளது கருப்பு கவுனி அரிசியாகும். இன்று கவுனி அரிசியில் சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி - 1/4 கப்
கருப்பட்டி - 1 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை
கருப்பு கவுனி அரிசியைக் கழுவி 6-7 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
பின் 1 கப் தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியைப் போட்டு கரைந்தபின் வடிகட்டி வைக்கவேண்டும்.
பின் ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு துண்டுகளாக நறுக்கிய முந்திரியைப் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
பின் அதே கடாயில் வடிகட்டிய கருப்பட்டியை ஊற்றி நன்கு கொதித்தபின் அதில் கரைத்து வைத்த கவுனி அரிசி கலவையை ஊற்றி குறைந்த தீயில் கட்டியில்லாமல் கைவிடாமல் கிளற வேண்டும்.
கலவை கெட்டியாகும் போது 1 டேபிள்ஸ்பூன் (இடையிடையே நெய் விட வேண்டும்) நெய் விட்டு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.
அல்வா பதம் வந்ததும் எடுத்து வைத்த முந்திரியைப் போட்டு கிளறி அடுப்பை அணைக்கவேண்டும்.
ஆரோக்கியமான சூடான சுவையான கவுனி அரிசி அல்வா தயார்.
வறுத்த முந்திரி, தேங்காய்த்துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கருப்பு கவுனி அரிசி - 1/4 கப்
கருப்பட்டி - 1 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - 10
செய்முறை
கருப்பு கவுனி அரிசியைக் கழுவி 6-7 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
பின் 1 கப் தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியைப் போட்டு கரைந்தபின் வடிகட்டி வைக்கவேண்டும்.
பின் ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு துண்டுகளாக நறுக்கிய முந்திரியைப் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
பின் அதே கடாயில் வடிகட்டிய கருப்பட்டியை ஊற்றி நன்கு கொதித்தபின் அதில் கரைத்து வைத்த கவுனி அரிசி கலவையை ஊற்றி குறைந்த தீயில் கட்டியில்லாமல் கைவிடாமல் கிளற வேண்டும்.
கலவை கெட்டியாகும் போது 1 டேபிள்ஸ்பூன் (இடையிடையே நெய் விட வேண்டும்) நெய் விட்டு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.
அல்வா பதம் வந்ததும் எடுத்து வைத்த முந்திரியைப் போட்டு கிளறி அடுப்பை அணைக்கவேண்டும்.
ஆரோக்கியமான சூடான சுவையான கவுனி அரிசி அல்வா தயார்.
வறுத்த முந்திரி, தேங்காய்த்துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
செல்லரோஜா
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X