search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சார்மினார் பிரியாணி
    X
    சார்மினார் பிரியாணி

    சூப்பரான சார்மினார் பிரியாணி

    பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. இன்று சூப்பரான சார்மினார் பிரியாணியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசிக்காக:


    நீளமான அரிசி - 2 கப்
    பிரிஞ்சி இலை - 3
    ஏலக்காய் - 2-3
    கிராம்பு - 2-3
    நெய் - 1 தேக்கரண்டி
    புதினா - 1/2 கப்
    அன்னாட்சி பூ - 1
    பட்டை - 1 துண்டு

    தண்ணீருக்கு தேவையானது

    உப்பு - தேவையான அளவு
    மட்டன் - 600 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    நெய் - 250 கிராம்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பட்டை - 2
    கிராம்பு - 4-5
    பட்டை - சிறிய துண்டு
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 2 டீஸ்பூன்

    ஊறவைக்க

    உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த்தூள் - 2 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தே - 1/2 தேக்கரண்டி
    தயிர் - 1 கப்
    இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
    பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் (கீறியது) - 2
    பால் - 1/4 கப்
    குங்குமப்பூ - 5-6
    புதினா - 1/2 கப்
    லெமன் ஜுஸ் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    லேயரிங்

    வறுத்த வெங்காயம்
    வறுத்த பூண்டு
    குங்குமப் பூ ஊறவைத்த பால் - 1 கப்
    கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு கைப்பிடி
    நெய் - 1/2 கப்

    சார்மினார் பிரியாணி

    செய்முறை

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் மட்டனை ஊறவைக்கத் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். 3-4 மணி நேரம் ப்ரிஜ்ஜில் எடுத்து வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 10-15 நிமிடம் ஊறவைக்கவும்.

    குங்குமப் பூ ஊறவைத்த தண்ணீரில் அரிசிக்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து பாதி வெந்ததும் அரிசியை வடித்து வைக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும நறுக்கிய தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சூட்டை குறைத்து பாலை சேர்க்கவும்

    மசாலா பொடி சேர்த்து கலக்கவும் பால் திரியாமல் பார்த்துக் கொள்ளவும்.

    இதனுடன் ஊறவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்போது பிரியாணி மசாலாவை சேர்த்து தீயைக் குறைத்து வைத்து வேகவைக்கவும்.

    மட்டன் முழுவதுமாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பிரியாணியை தயார் செய்ய, பெரிய அகலமான பாத்திரத்தை எடுக்கவும்.

    நெய் சாதத்தை ஒரு லேயராக வைத்து, அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, நெய், மற்றும் குங்குமப் பூ பால் ஊற்றி, அதன் மேல் வேகவைத்த கறியை வைக்கவும்.

    இதேபோல் லேயரை சாதம் மற்றும் கறி தீரும் வரை வைக்கவும்.

    பின் பாத்திரத்தை மூடி அதன்மேல் கனமான பாத்திரத்தை வைக்கவும். மீடியம் ஹீட்டில் 20-25 நிமிடம் வேகவைக்கவும். பின் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடங்களுக்கு மூடியை திறக்கவும்.

    10 நிமிடங்களுக்குப் பின் அரிசி உடையாமல் கிளறி விடவும்.

    தயிர் பச்சடியுடன் பரிமாறவும்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×