search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான காளான் கோப்தா
    X

    சூப்பரான காளான் கோப்தா

    டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த காளான் கோப்தா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பட்டன் காளான் - 200 கிராம்
    கேரட் - 1
    முட்டைகோஸ் - 1
    பச்சைப்பட்டாணி - கால் கப்
    மைதா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 3 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைகேற்ப



    செய்முறை :


    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    முட்டை கோஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து அரைத்து கொள்ளவும்.

    காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு பாத்திரத்தில், துருவிய கேரட், பொடியாக வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்து வைத்த பச்சைப்பட்டாணி, மைதா, சோள மாவு, மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மாவு போல் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    ஏற்கனவே வேகவைக்கப்பட்ட காளான்களை, இந்த கலவையால் முழுவதுமாக மூடும்படி நன்றாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்த காளான் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த காளான்களை ஒரு தட்டில் வைத்து அதனை நேர்வாக்கில் இரண்டாக வெட்டி வைத்து அதன் மேல் கொத்தமல்லிதழைகளை தூவினால், சூடான, சுவையான, மொறுமொறுப்பான காளான் கோப்தா தயார்.

    இதனை சாம்பார் அல்லது தயிரில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×