என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மீன் குழம்பு செய்து அலுத்து போனவர்கள் சற்று வித்தியாசமாக மீன் குருமா செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    (வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)
    வாழை மீன் - 3
    பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்
    தேங்காய் - அரை மூடி
    பச்சை மிளகாய் - 20 (நீளமாக நறுக்கவும்)
    வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
    நாட்டுத் தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்)
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    புளிப்பு மாங்காய் - 1
    கொத்தமல்லி - ஒரு கையளவு

    செய்முறை :

    * வாழைமீனை (கழுவி) துண்டு, துண்டாக நறுக்கவும்.

    * தேங்காய் சோம்பு, பொட்டு கடலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் சூடானதும் விட்டு சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு மீன், மாங்காய் போட்டு நன்றாக கொதி வந்து மீன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சுவையான மீன் குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வார விடுமுறைகளில் வித்தியாசமாக என்ன சமையல் செய்யலாம் என்று யோசிப்பவர்கள் கணவாய் மீன் வறுவல் செய்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    கணவாய் மீன் - 300 கிராம்
    இஞ்சி விழுது - 2 மேசைகரண்டி
    பூண்டு விழுது - 2 மேசைகரண்டி
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - 15
    தக்காளிப் பழம் - 1
    எண்ணெய் - 2 மேசைகரண்டி
    கொத்தமல்லி இலை - தேவையான அளவு
    பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
    கடுகு - அரை ஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    * கணவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, இவற்றை சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் ஊறவைத்த கணவாய் மீன் கலவையை போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)

    * 20 நிமிடங்களில் கணவாய் வெந்து விடும். சட்டியில் உள்ள நீர்த்தன்மை முழுவதும் வற்றி எண்ணெய் பிரிந்து டிரையாக, உதிரியாக வரும் போது கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.

    * சுவையான கணவாய் மீன் பொரியல் ரெடி.

    குறிப்பு: இதனை ஒரு வார விடுமுறையில், சனிக்கிழமைகளில் செய்து சாப்பிடுங்கள், காரணம் சிலருக்கு கணவாய் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படுமாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜவ்வரிசி, சேமியா பாயாசம் செய்து அலுத்து போனவர்கள் அரிசிப்பாயாசம் செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    உடைத்த பச்சரிசி - 100 கிராம்
    வெல்லம் - 200 கிராம்
    தேங்காய்ப்பால் - 1 கப்
    நெய் - சிறிது
    முந்திரி, கிஸ்மிஸ் - சிறிது
    ஏலக்காய் தூள்  - சிறிது

    செய்முறை :

    * உடைத்த பச்சரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வெந்த அரிசிவுடன் வெல்லம் போட்டு அது கரைந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    * அடுத்து அதில் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கடைசியில் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

    * சூப்பரான அரிசிப்பாயாசம் ரெடி.

    * தேங்காய் பாலுக்குப் பதில் துருவிய தேங்காயையும் போடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பான்கேக் மிகவும் பிடிக்கும். ரைஸ் நூடுல்ஸ் வைத்து பான்கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரைஸ் நூடுல்ஸ் - 1 கப்
    வாழைப்பழம் - 2 பெரியது
    முட்டை - 2
    பால் - கால் கப்
    பேரீச்சம் பழம் - கால் கப்
    நட்ஸ் - கால் கப்
    சர்க்கரை - சுவைக்கு
    ஏலக்காய் தூள் - கால் ஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை
    வெண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    * பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.

    * நட்ஸ், பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாழைப்பழத்தை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ரைஸ் நூடுல்ஸ்( உடைத்து போடவும்)போட்டு அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். நூடுல்ஸ் நன்கு மென்மையாகும் வரை வைக்கவும்.

    *  மற்றொரு பாத்திரத்தில் முட்டை, பால், சர்க்கரை, ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.

    * அடுத்து அதில் நூடுல்ஸ், பொடியாக நறுக்கிய நட்ஸ், பேரீச்சம்பழம், வாழைப்பழம் போட்டு நன்றாக கலக்கவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நூடுல்ஸ் கலவையை ஒரு கரண்டி கனமான அளவில் விட்டு சுற்றி வெண்ணெய் விடவும். வெந்ததும் திருப்பி போட்டு மறுபடியும் சுற்றி வெண்ணெய் விடவும். தோசை கரண்டியால் நன்றாக அழுத்தி விடவும்.

    * வெந்ததும் எடுத்து ஏலக்காய் நசுக்கி போட்ட தேங்காய் பாலுடன் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட் அல்வா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 1/2 கிலோ
    சர்க்கரை - 200 கிராம்
    பால் - 200 மி.லி.
    நெய் - 100 கிராம்
    ஏலக்காய்ப்பொடி - 1/4 டீஸ்பூன்
    முந்திரி - 10
    கிஸ்மிஸ் - 10
    பாதாம் - 10

    செய்முறை :

    * பீட்ரூட்டின் தோலை சீவி துருவிக் கொள்ளவும்.

    * பாதாமை துருவிக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் நெய் ஊற்றி அடுப்பில் வைத்து முந்திரி, கிஸ்மிஸ் முதலியவற்றை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * பின்னர் அதே நெய்யில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * பின்னர் பாலையும், சீனியையும் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * இடையிடையே சிறிது சிறிதாக நெய்யைச் சேர்க்கவும்.

    * பீட்ரூட் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது ஏலக்காய்ப்பொடி, முந்திரி, கிஸ்மிஸ், பாதாம் சேர்த்து கிளறி இறக்கி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ரசமலாய் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் இதனை செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 3 லிட்டர்
    சர்க்கரை - 3 கப்
    தண்ணீர் - 4 கப்
    குங்குமப் பூ - சிறிது
    ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    பாதாம், முந்திரி, பிஸ்தா - 3 டேபிஸ் ஸ்பூன்

    செய்முறை :

    * பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

    * 1 லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவுக்கு சுண்ட வைக்கவும்.

    * அந்த பாலில் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

    * மீதியுள்ள 2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து கொதிக்கும் போது எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு கலந்தவுடன் பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும் படி வைக்கவும்.

    * தண்ணீர் எல்லாம் நன்றாக வடிந்த பின் அந்த மூட்டையில் உள்ள கலவையை ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் மென்மையாக அழுத்தி பிசையவும்.
     
    * பின்னர் அந்த மாவை சிறு சிறு வடை போல தட்டிக் கொள்ளவும்.

    * அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    * கொதிக்கும் போது வடை போல் தட்டி வைத்திருக்கும் பன்னீரை சர்க்கரைப் பாகில் போட வேண்டும். அடுப்பை மிதமான தீயில்வைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் போட்ட வடைகள் உப்பி, பெரிதாகி விடும்.

    * இப்போது இந்த வடைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலில் போட வேண்டும்.

    * ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

    * தித்திப்பான ரசமலாய் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்
    பட்டர் - 2 ஸ்பூன்
    சீனி - 1 கப்
    கார்ன் ஃப்ளார் - 11/2 டேபிள் ஸ்பூன்
    பிஸ்தா பருப்பு - 25
    பாதாம் பருப்பு - 10

    செய்முறை :

    * பிஸ்தா பருப்பை தின் ஸ்லைசுகளாக துருவிக் கொள்ளவும்.

    * பாதாம் பருப்பை இரண்டாக நறுக்கி வைக்கவும்.

    * ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் அடுப்பைக் குறைத்து வைக்கவும். பால் முழுவதும் சுண்டி ஏடு வர ஆரம்பிக்கும் சமயம் சீனியைப் போடவும்.

    * சீனி கரைந்ததும் கார்ன் ஃப்ளாரைப் போட்டு நன்கு கிளறவும்.

    * நன்கு கெட்டியான பதம் வரும் போது பட்டரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி உருண்டைகள் பிடித்து அதன் மேல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பை தூவினால் அருமையான தூத்பேடா தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிலேயே சைனீஸ் ஸ்டைலில் மட்டன் சாப்ஸ் செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள் - 10
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க

    கிரேவி செய்ய :

    வெங்காயம் - 1
    குடமிளகாய் - 1
    அஜினமோட்டோ - 1 சிட்டிகை
    சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
    சர்க்கரை - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    * ஒரு வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

    * கிரேவியில் கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மட்டன் சாப்ஸ், அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து அரைமணி நேரம் ஊறவிடவும்.

    * குக்கரில் ஊற வைத்த கறியை போட்டு 5 விசில் போட்டு வேக வைக்கவும். விசில் போனவுடன் அந்த கறியை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் வெங்காயம், குடமிளகாய் போட்டு வதக்கவும்.

    * பின்னர் அதில் அஜினமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    * கடைசியாக அதில் பொரித்து வைத்துள்ள சாப்ஸையும் சேர்த்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரமல் கஸ்டர்டு புட்டிங் சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்பதில்லை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 500 மிலி
    முட்டை - 2
    சீனி - 1 1/4 கப்
    வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை :

    * முட்டை நன்றாக அடித்து வைக்கவும்.

    * பாலை நன்கு காய்ச்சி அதில் முக்கால் கப் சீனியைப் போட்டு நன்கு கரைந்ததும் ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

    * அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து நன்கு அடித்து கலக்கவும்.

    * மீதமுள்ள 1/2 கப் சீனியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும். சீனி உருகி கோல்டன் ப்ரவுன் கலர் சிரப்பாக மாறும் வரை கரண்டியால் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சீனி கேரமல் சிரப்பாக ஆனவுடன் அதனை பேக்கிங் ட்ரேயில் எல்லாப் பக்கமும் படுமாறு ஊற்றவும்.

    * கேரமல் சிரப் கெட்டியானவுடன் கலந்து வைத்துள்ள பால் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்ய வேண்டும்.

    * இல்லையெனில் ட்ரேயை அலுமினிய foil - ஆல் மூடி ஆவியில் வேக வைக்கவும். மூடவில்லையென்றால் தண்ணீர் புட்டிங்கிற்குள் போய் விடும்.

    * நன்றாக வெந்தவுடன் புட்டிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    * பரிமாறுகையில் புட்டிங்கை கவிழ்த்துப் பரிமாறவும்.

    * புட்டிங்கின் மேல் பாகத்தில் கேரமல் அழகாக பரவியிருக்கும்.

    * கேரமல் கஸ்டர்டு புட்டிங் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாணுடன் சாப்பிட சாஸ் வித் ஃபிஷ் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள் இல்லாத மீன் - 500 கிராம்
    மைதா - 3 டீஸ்பூன்
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    முட்டை - 1
    பெரிய வெங்காயம் - 1
    தண்ணீர் - 1/2 கப்
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    அஜினமோட்டோ - 1 சிட்டிகை
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    ஸ்பிரிங் ஆனியன் - 2

    செய்முறை :

    * பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொண்டு அத்துடன் மைதா, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

    * அடுத்து அந்த மசாலாவை மீன் துண்டுகள் மேல் பூசி அரை மணி நேரம் ஊற விடவும்.

    * அரை மணி நேரம் கழித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, மிளகுபொடி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

    * சற்று திக்காக வந்தவுடன் பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை இதில் போட்டு 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

    * சப்பாத்தி, நாணுடன் சாப்பிட சாஸ் வித் ஃபிஷ் சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இனிப்பு விரும்பி சாப்பிடுபவர்களுக்கான தினையரிசி சோமாசியை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினையரிசி- 200 கிராம்,
    மைதாமாவு - 200 கிராம,
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - 1 சிட்டிகை

    பூரணத்திற்கு :

    நாட்டுச்சர்க்கரை - ½ கப்,
    கசகசா -1 ஸ்பூன்,
    உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய்த்தூள், கொப்பரைத்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்.
    சிறிதளவு பச்சை கற்பூரம்.

    செய்முறை :

    * திணையரிசியை வறுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

    * பின் அதனுடன் நாட்டுச்சர்க்கரையை கலந்து சிறிதளவு ஏலக்காய் பொடியை தூவி பிசைந்துகொள்ளவேண்டும்.

    * முந்திரி, திராட்சையை தனியாக நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * பின் அதை திணையரிசி நாட்டுச்சர்க்கரை கலவையில் சேர்த்து பிசைந்து அதனுடன் கொப்பரைத்துருவலையும் சேர்த்துக்கொண்டால் பூரணம் ரெடி.

    * மைதாமாவில் சிறிதளவு உப்பு, கசகசா, நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு பிசைந்துகொண்டு, அதை சிறிய உருண்டைகளாக்கி பின் அதை தட்டையாக ஒரு அப்பளம் போல் தட்டி அதன் நடுவே செய்துவைத்திருக்கும் பூரணத்தை கொஞ்சம்போல வைத்து ஓரங்களை மடித்து மூடிவிடவேண்டும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் செய்து வைத்துள்ள சோமாசிகளை காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் திணையரிசி சோமாசி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இதுவரை நீங்கள் ஹோட்டலில் சுவைத்த கடாய் பன்னீரை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 4
    பட்டை - 1
    பூண்டு - 4 பற்கள்
    பச்சை மிளகாய் -

    செய்முறை:

    * முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

    * பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

    * அடுத்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், சூடான கடாய் பன்னீர் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×