என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான கடாய் பன்னீர்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான கடாய் பன்னீர்

    இதுவரை நீங்கள் ஹோட்டலில் சுவைத்த கடாய் பன்னீரை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 4
    பட்டை - 1
    பூண்டு - 4 பற்கள்
    பச்சை மிளகாய் -

    செய்முறை:

    * முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

    * பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

    * அடுத்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், சூடான கடாய் பன்னீர் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×