என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெய் கத்தரிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    கத்தரிக்காய் - 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் - 15
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 2
    தேங்காய் - 2 துண்டுகள்
    பூண்டு - 10 பல்
    கடுகு - 1/4 ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்
    மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
    தனியா பொடி - 1
    மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
    புளி தண்ணீர் - 1 கப்
    நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கீற்று
    கொத்தமல்லி - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
     
    செய்முறை :
     
    * கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தரிக்காயை (பூ போல) நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

    * தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
     
    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

    * மிக்சியில் வதக்கிய வெங்காயம், தக்காளியை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
     
    * வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

    * அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.
     
    * கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும்.

    * இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும்.

    * அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

    * நன்கு கொதித்து கத்தரிக்காய் வெந்து குழம்பு திக்கான பதத்துடன் எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த கோகோ கேக்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோவா (இனிப்பு இல்லாதது) - 2 கப்,
    மைதா - ஒரு கப்,
    கோகோ பவுடர் - 5 டீஸ்பூன்,
    சர்க்கரை - 4 கப்,
    நெய் - சிறிதளவு.

    செய்முறை :

    * அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.

    * மற்றொரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் கோவா மற்றும் சர்க்கரை, கோகோ பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, ஏற்கெனவே தட்டில் கொட்டிய கலவை மீது கொட்டி சமமாக பரப்பவும்.

    * நன்றாக ஆறிய பின் துண்டுகள் போடவும்.

    * கோகோ கேக் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான மீல் மேக்கர் (சோயா மீட்) குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    மீல் மேக்கர் - 1 கப்
    பட்டாணி - அரை கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    சீரக தூள்  - 1/2 ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
    தேங்காய் பால் - 1/2 கப்
    உப்பு - 3/4 ஸ்பூன்  
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
     
    * மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
     
    * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
     
    * அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    * அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில்லி சிக்கன் பிரையை போல் சில்லி சிக்கன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - ½ கிலோ
    தயிர் - ½ கப்
    பூண்டு - 6 பல்
    குடைமிளகாய் - 2
    பச்சை மிளகாய் - 2
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - 1½ தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன், தயிர் அரை தேக்கரண்டி, உப்பு, மஞ்சள்த்தூள் போட்டு நன்றாக கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, குடைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.

    * பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறவும்.

    * பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் பிரிட்ஜில் ஊற வைத்த சிக்கனை போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.

    * தொடர்ந்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    * சிக்கன் பாதியளவு வெந்தவுடன் குடைமிளகாயைச் சேர்க்கவும்.

    * சிக்கன் நன்றாக வெந்தவுடன் குழம்பில் நறுக்கிய பூண்டு, கரம் மசாலாத்தூள் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    * கடைசியாக கொத்துமல்லி தூவி இறக்கவும்.

    * சுவையான சில்லி சிக்கன் குழம்பு தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை, சீஸ், முட்டை வைத்து ஒரு சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை -  3 (வெள்ளை கரு மட்டும்)
    உப்பு - தேவைக்கு
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    கீரை - 1 கையளவு
    தக்காளி - சிறியது 1
    வெங்காயம் - 1
    சீஸ் - 1/4 கப்
    ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு

    குறிப்பு: விருப்பம் இருந்தால் காளான்கள், சூடுபடுத்தப்பட்ட ப்ரோக்கோலி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சீஸை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கரு, கீரை, மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * பிறகு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நடுத்தர வெப்பத்தில் வைத்து முட்டை கலவையை கடாயில் ஊற்றி 4 நிமிடங்கள் வேகவைத்து அகன்ற கரண்டி ஒன்றை எடுத்து 2ஆக மடித்துகொள்ள வேண்டும். பின்னர் வெப்பத்தை குறைத்து சீஸ் மற்றும் தக்காளியை தூவி முட்டையை இரண்டு பக்கம் திருப்பி போட்டு சீஸ் உருகியதும் ஒரு நிமிடம் வேகவைத்து பரிமாறவும்.

    * கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட் ரெடி.

    * உங்களுக்கு விருப்பமான எந்த கீரையை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு (கொத்துக்கறி) செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா (கொத்துக்கறி) - 200 கிராம்
    வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    நெய் - 2௦ கிராம்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    முட்டை - 2
    பட்டை - 2
    லவங்கம் - 2
    ஏலக்காய் - 2
    முந்திரி பருப்பு - 15
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 3
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.

    * மட்டன் கீமாவை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * குக்கரில் கழுவிய மட்டன் கீமாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர், வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    * கீமா வெந்து நீர் வற்றியதும், ஆற வைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

    * ஒரு கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின் அரைத்து வைத்த கீமாவை சேர்த்து கிளறவும்.

    * அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி கைவிடாமல் கிளறி உப்பு சரி பார்க்கவும். முட்டை உதிரியாக வரும் வரை கிளறவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தழை, வறுத்த முந்திரி துவி இறக்கி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மைதா அல்லது கோதுமை மாவில் செய்த கொழுக்கட்டையை எண்ணெயில் பொரித்தால் சூப்பாரான இருக்கும். இது வட இந்தியாவில் மிகவும் பிரபலம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மேல் மாவிற்கு :

    கோதுமை மாவு அல்லது மைதா - 1 கப் (குவித்து அளக்கவும்)
    நெய் அல்லது எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - ஓரு சிட்டிகை

    பூரணத்திற்கு :

    தேங்காய்த்துருவல் - 1 கப்
    வெல்லம் பொடித்தது - 3/4 கப்
    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை :

    * மைதாவை நன்றாக சலித்து விட்டு, அத்துடன் உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு கலந்து அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

    * வெல்லத்தில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.

    * ஒரு பெரிய நெல்லிக்காயளவு மாவை எடுத்து, மெல்லிய பூரியாக இட்டு, அதன் நடுவில் சிறிதளவு பூரணத்தை வைத்து, எல்லா மூலைகளையும் சேர்த்து, மேல் பாகத்தை நன்றாக அழுத்தி விட்டு மோதகம் செய்து கொள்ளவும். எல்லா மாவையும் இப்படியே செய்து வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், 4 அல்லது 5 மோதகங்களை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * இப்போது சூப்பரான பொரித்த இனிப்பு மோதகம் ரெடி.

    * இதை மைதா மாவிற்குப் பதில் கோதுமை மாவை உபயோகித்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜவ்வரிசி பாயாசத்தை விட அரிசி பாயாசம் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கப்
    வெல்லம் பொடித்தது - 1 கப்
    தேங்காய்த்துருவல் - 2 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    நெய் - 2 டீஸ்பூன்
    தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - தேவைக்கு
    திராட்சை - தேவைக்கு

    செய்முறை :

    * அரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

    * வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சற்று கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.  

    * பின்னர் அதில் கரைத்த வெல்லத்தை சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.  

    * பாயாசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும்.  

    * கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய தேங்காய், முந்திரி, திராட்சையை போட்டு சிவக்க வறுத்து பாயாசத்தில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    * தித்திப்பான அரிசி பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனை வைத்து கிரேவி, குழம்பு, வறுவல், 65 என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். சிக்கனை வைத்து சான்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரட் - 6 துண்டுகள்
    எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம் (வேக வைத்து, கொத்தியது)
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - தேவையான அளவு
    வெங்காயம் - 1
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    வெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை வேகவைத்து மிக்சியில் போட்டு துருவியது போட்டு செய்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி, கொத்திய சிக்கன், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.

    * பின்னர் பிரட் துண்டுகளை எடுத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவி, அதன்மேல் தக்காளி சாஸ் தடவி, பின் ஒரு பிரட்டின் நடுவில் சிக்கனை வைத்து, வெண்ணெய் தடவிய மற்றொரு பிரட்டை வைத்து மூடி பரிமாறவும்.

    * இப்போது சுவையான சிக்கன் சான்விச் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் மஞ்சூரியன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 8
    மைதா மாவு - 2 ஸ்பூன்
    சோள மாவு - 1/2 ஸ்பூன்
    வெங்காயம் - 1/2 கப்
    பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    குடமிளகாய் - 1 சிறியது
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது - 3 ஸ்பூன்
    சோயா சாஸ், தக்காளி சாஸ் - தேவைகேற்ப
    எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

    செய்முறை :

    * வெங்காயம், குடமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

    * பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * இதனுடன் மிளகாய் தூள், சோயா சாஸ், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.

    * இந்த கிரேவியில் ஏற்கனவே பொரித்து வைத்த பிரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறி வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

    * சூடான, சுவையான பிரட் மஞ்சூரியன் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இந்த ஆலு பிரெட் டிக்கிஸ் மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் - தலா 4,
    மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா - தலா அரை டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு -  ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    * உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.

    * பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், மசித்த உருளைக்கிழங்கு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டவும்.

    * தவாவில் எண்ணெய் விட்டு, தட்டி வைத்த டிக்கிகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.

    * சுவையான ஆலு பிரெட் டிக்கிஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் பிரியாணி செய்யும் போது அதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - ஒரு கிலோ
    பாஸ்மதி அரிசி - 1 கிலோ
    நெய் - 100 கிராம்
    எண்ணெய் - 150 மில்லி
    பெரிய வெங்காயம் - அரை கிலோ
    தக்காளி - 400 கிராம்
    பெரிய எலுமிச்சை பழம் - 1 சாறு எடுக்கவும்
    இஞ்சி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
    பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - 15 கிராம்
    புதினா , கொத்தமல்லித்தழை - அரைக் கட்டு
    தேங்காய் - அரை மூடி
    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    * தேங்காயை மிக்சியில் போட்டு தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.

    * ஆட்டுக்கறியை நன்றாக கழுவி குக்கரில் அரை டம்ளர் தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 விசில் போட்டு வேகவிட்டு இறக்கவும்.

    * பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

    * இத்துடன் மீதம் இருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து இதில் வேக வைத்த ஆட்டுக்கறியை மட்டும் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிரேவி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.

    * இத்துடன் தேங்காய்ப்பால், கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கலவையை வேக விடவும்.

    * மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரிசி, தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் சாதத்தை வடித்துக் கொள்ளவும்.

    * பிரியாணி கலவையில் அரிசியை உடையாமல் சேர்த்துக் கிளறி நெய் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி சமமாக கலக்கவும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு அதன் மேல் சோறு வடித்த கஞ்சியை வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×