என் மலர்
சமையல் - Page 5
- வீட்டில் குழந்தைகளுக்கு பாயாசம், கீர் செய்து கொடுத்து இருப்பீங்க.
- இன்று வித்தியாசமாக ஆப்பிள் ரபடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் - 2,
பால் - அரை லிட்டர்,
சர்க்கரை - ஒரு கப்,
பாதாம் - 10 (துருவிக் கொள்ளவும்),
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
முந்திரிப் பொடி - 2 டீஸ்பூன்.
செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி வைக்கவும்.
ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
துருவிய ஆப்பிளை வெறும் கடாயில் சூடுபட கிளறவும்… சர்க்கரை, பால் சேர்த்து, குறைவான தீயில் கொதிக்கவிடவும்.
திக்கான பதம் வந்ததும், பாதாம் துருவல், முந்திரிப் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
இதை சூடாகவோ… குளிர வைத்தோ பரிமாறலாம்.
இப்போது சூப்பரான ஆப்பிள் ரபடி ரெடி.
- பருப்பு பொடியின் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
- இன்று பருப்பு பொடி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - கால் கப்,
பொட்டுக்கடலை - ஒரு கப்,
பூண்டு - 2 பல்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 8,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் துவரம்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
அதேபோல, சீரகம், பொட்டுக்கடலை, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயை வறுத்து, மற்ற பொருட்களுடன் கலந்து, உப்பு சேர்த்து மிக்சியில் பொடி செய்தால்… ஆந்திரா பருப்பு பொடி தயார்.
இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட… அட்டகாசமான ருசியில் இருக்கும். அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் சேர்த்துச் சாப்பிடால், சுவை கூடும்.
- தக்காளி குருமாவானது தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அருமையாக இருக்கும்.
- தக்காளி குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/4 இன்ச்
பச்சை மிளகாய் - 1
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின்னர், அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தக்காளி குருமா ரெடி!!!
- வாரத்துக்கு 3 முறை வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று நீங்கும்.
- மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும்.
தேவையான பொருட்கள் :
சிறிய வாழைத்தண்டு - ஒன்று,
பூண்டு - 2 பல்,
ஓமவல்லி இலை, வெற்றிலை - தலா ஒன்று,
துளசி - சிறிதளவு, மிளகு - 3.
செய்முறை:
வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்…
பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வாழைத்தண்டு, பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும்.
வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்… சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.
கேப்பை (கேழ்வரகு) மாவு - ஒரு கப்,
நாட்டு சர்க்கரை - ஓர் உழக்கு,
நெய் - தேவையான அளவு,
ஏலக்காய் - 5,
முந்திரி - 10,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்.
செய்முறை:
நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.
ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்.
கேழ்வரகு மாவைச் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி ஊறவைக்கவும்.
சிறிது நேரம் கழித்து மாவைக் கட்டியில்லாமல் சலித்து, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும்.
நன்றாக வெந்தபின் தட்டில் கொட்டி கட்டியில்லாமல் உதிர்க்கவும்.
பிறகு, நாட்டு சர்க்கரையைக் கலந்து வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான சுவையான கேப்பை புட்டு ரெடி.
பப்பாளிக்காய் (சிறியது) - ஒன்று,
தேங்காய் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு - ஒரு கப்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும்.
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் நைசாக அரைத்து கொள்ளவும்.
பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
அரைத்த தேங்காய் கலவையை வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பப்பாளி கலவையில் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து இறக்கவும்.
இப்போது சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு ரெடி.
சப்பாத்தி மாவு - 1 கப்
முருங்கை கீரை - 1/4 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 5
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், முருங்கைக் கீரை, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவை போட்டு அதோடு உப்பு சேர்த்து கலந்த பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முருங்கை கீரை, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு சுட்டு எடுத்தால் முருங்கைக் கீரை சப்பாத்தி ரெடி.
தினை அரிசி - அரை கப்
முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
காய்ந்த மிளகாய் - நான்கு
இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
வெங்காயம் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
துருவிய கேரட் - அரை கப்
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று தடிமனாக வார்க்கவும்.
தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.
சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
துருவிய தேங்காய் - ஒரு கப்,
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
பச்சை மிளகாய் (பெரியது) - ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
வேக வைத்த சாதம் - 1 கப்
தயிர் - முக்கால் கப்
ப.மிளகாய் - 2
உப்பு - சுவைக்கு
நன்கு கனிந்த மாம்பழம் - 1
சாதம் வடித்த தண்ணீர் - அரை கப்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
மாம்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ப.மிளகாயை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு மண் சட்டியில் வேக வைத்த சாதத்தை போட்டு அதனுடன் தயிர், உப்பு, ப.மிளகாய், நறுக்கி மாம்பழம் சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும்.
அனைத்தும் நன்றாக ஒன்று சேர்ந்ததும் சூடான சாதம் வடித்த தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
வாழைப்பழம் - 1
கிவி பழம் - 2
ஆப்பிள் - 1
சின்ன வெங்காயம் - 6
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை
முந்திரி - 6
மிளகு தூள் - தேவைக்கு
செய்முறை :
கிவி, ஆப்பிள், வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்திரியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய கிவி, ஆப்பிள், வாழைப்பழம், சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய புதினா, தேன், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக பரிமாறும் போது கொரகொரப்பாக பொடித்த முந்திரியை தூவி பரிமாறவும்.
சூப்பரான கிவி ஆப்பிள் வாழைப்பழ சாலட் ரெடி.
வரகு - 1 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
அவல் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 )
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக ஊறிய பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், உப்பு, பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!!