என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
X
இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்த கருப்பு உளுந்து அடை
Byமாலை மலர்30 April 2022 5:39 AM GMT (Updated: 30 April 2022 5:39 AM GMT)
கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - கால் கிலோ
அரிசி - ஒரு கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை 3 மணிநேரம் நன்றாக ஊற வைத்து நைசாக அரைத்துகொள்ளவும்.
தோல் நீக்காத கருப்பு உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறியதும் அதனுடன் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து கலந்து கொள்ளவும். அதிகத் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
அரைத்த மாவில் கறிவேப்பிலை, கொத்துமல்லி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையவும்.
மாவைச் சிறிது எடுத்து, அடையாகத் தட்டி சூடான தோசைக் கல்லில் போடவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் வெந்த பிறகு எடுக்கவும்.
இப்போது சுவையான கருப்பு உளுந்து அடை தயார்….
கருப்பு உளுந்து - கால் கிலோ
அரிசி - ஒரு கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை 3 மணிநேரம் நன்றாக ஊற வைத்து நைசாக அரைத்துகொள்ளவும்.
தோல் நீக்காத கருப்பு உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறியதும் அதனுடன் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து கலந்து கொள்ளவும். அதிகத் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
அரைத்த மாவில் கறிவேப்பிலை, கொத்துமல்லி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையவும்.
மாவைச் சிறிது எடுத்து, அடையாகத் தட்டி சூடான தோசைக் கல்லில் போடவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் வெந்த பிறகு எடுக்கவும்.
இப்போது சுவையான கருப்பு உளுந்து அடை தயார்….
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X