என் மலர்

    சமையல்

    கற்பூரவல்லி இஞ்சி டீ
    X
    கற்பூரவல்லி இஞ்சி டீ

    இருமல், தொண்டை வலியை குணமாக்கும் கற்பூரவல்லி இஞ்சி டீ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இருமல், சளி தொல்லை, தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவல்லி இஞ்சி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள் :

    டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கற்பூரவல்லி  - 5 இலை,
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    தண்ணீர் - 2 கப்.
    தேன் - 1 டீஸ்பூன்.

    செய்முறை :

    கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது டீத்தூளுடன், கற்பூரவல்லி இலை, இஞ்சி துருவல் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

    நன்றாக கொதித்து டீ ரெடியானதும் இறக்கி வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகவும்.

    இப்போது கற்பூரவல்லி இஞ்சி டீ ரெடி.

    Next Story
    ×