என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்து நிறைந்த தோசை
Byமாலை மலர்3 Aug 2021 5:58 AM GMT (Updated: 3 Aug 2021 5:58 AM GMT)
கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேவையான பொருட்கள் :
புளித்த தோசை மாவு - 1/2 கப்
கம்பு மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
ப.மிளகாய் - 2
வெங்காயம் - 2
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை மாவு, கம்பு மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை,சீரகம், ப.மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும். மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும். சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும். தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும். அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும். இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.
தோசை மெல்லியதாக இருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும். பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.
பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.
சுவையான சத்தான கம்பு தோசை ரெடி.
புளித்த தோசை மாவு - 1/2 கப்
கம்பு மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
ப.மிளகாய் - 2
வெங்காயம் - 2
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை மாவு, கம்பு மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை,சீரகம், ப.மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும். மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும். சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும். தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும். அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும். இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.
தோசை மெல்லியதாக இருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும். பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.
பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.
சுவையான சத்தான கம்பு தோசை ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X