என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கறிவேப்பிலை காம்பை தூக்கி போடாதீங்க... அதுல சூப் செய்யலாம்...
Byமாலை மலர்4 Jun 2021 5:40 AM GMT (Updated: 4 Jun 2021 5:40 AM GMT)
கறிவேப்பிலை இலையை மட்டுமே சமையலில் பயன்படுத்துவது உண்டு காம்பை குப்பையில் போட்டு விடுகிறோம் காரணம் அதன் மகத்துவம் அறிவதில்லை. கறிவேப்பிலை காம்பில் சூப் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை:
கறிவேப்பிலை அதன் காம்போடு ஒன்றிரண்டாக வெட்டியது - 15 வரை
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4
சிறிய வெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
தக்காளி - 1 சிறியது
கரம் மசால் பொடி-1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
தாளிக்க:
வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
சோம்பு/ சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகு- 3
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, சிறிய வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு அதனுடன் 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 5 விசில் வரை வேகவிடவும்.
விசில் போனவுடன் மத்தால் நன்கு கடைந்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வடிகட்டி வைத்துள்ள சூப்பை இதில் ஊற்றி கொதிக்க விடவும்.
அதனுடன் கரம் மசால் பொடி சேர்க்கவும்.
கடைசியாக சூப்பை இறக்கி அதில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
சத்தான சுவையான கறிவேப்பிலை காம்பு சூப் ரெடி.
கறிவேப்பிலை அதன் காம்போடு ஒன்றிரண்டாக வெட்டியது - 15 வரை
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4
சிறிய வெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
தக்காளி - 1 சிறியது
கரம் மசால் பொடி-1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
தாளிக்க:
வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
சோம்பு/ சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகு- 3
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, சிறிய வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு அதனுடன் 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 5 விசில் வரை வேகவிடவும்.
விசில் போனவுடன் மத்தால் நன்கு கடைந்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வடிகட்டி வைத்துள்ள சூப்பை இதில் ஊற்றி கொதிக்க விடவும்.
அதனுடன் கரம் மசால் பொடி சேர்க்கவும்.
கடைசியாக சூப்பை இறக்கி அதில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
சத்தான சுவையான கறிவேப்பிலை காம்பு சூப் ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X