
வேர்க்கடலை - 1 கப்
பூண்டு - 4 பல்
புளி - சிறிதளவு
தேங்காய் - சிறிதளவு
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு, சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம். பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும்.
ஆறிய வேர்கடலை, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
பின் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து விடவும்.
கெட்டியான வேர்கடலை சட்னி தயார்.